பௌர்ணமி, வார விடுமுறையை முன்னிட்டு பல்வேறு இடங்களுக்கு 810 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. பொதுவாகவே தமிழக அரசானது வார விடுமுறை மற்றும் சிறப்பு நாட்களில் கூடுதல் பேருந்துகளை இயக்குவது வழக்கம். இந்நிலையில் பௌர்ணமி, வார விடுமுறையை முன்னிட்டு பல்வேறு இடங்களுக்கு 810 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் வெள்ளிக்கிழமை(இன்று), சனிக்கிழமை, ஞாயிறுக்கிழமை அன்று சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கும், இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.