தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்கள் தயாரிக்கும் மளிகை உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் வீடுகளுக்கே டெலிவரி செய்ய கோப் பஜார் என்ற புதிய மொபைல் செயலி இந்த மாதம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. தற்போது தமிழகத்தில் எட்டு கூட்டுறவு சங்கங்களின் மசாலா வகைகள், தேன், உரங்கள் உட்பட 64 பொருட்களை மொபைல் செயலியில் ஆர்டர் செய்ய முடியும். அந்த பொருள்களை வீட்டுக்கு டெலிவரி செய்யும்போது போக்குவரத்துக் கட்டணமாக 100 ரூபாய் வசூல் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் போக்குவரத்து கட்டணத்தை குறைக்குமாறு கோரிக்கை விடுத்த நிலையில் இதனை தொடர்ந்து இன்று முதல் அந்த கட்டணம் 50 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.