தமிழகத்தில் நெல்லை மாவட்டம் மலைப்பகுதி மற்றும் கன்னியாகுமரியில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று முதல் ஜனவரி 7ஆம் தேதி வரை தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் நீலகிரி மாவட்டத்தில் மலைப்பகுதியில் உறை பனிக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா ஆகிய கடல் பகுதிகளில் 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.