திண்டுக்கல் மாவட்டம் நத்தம் உப மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று (04-09-2023) திங்கட்கிழமை நடைபெறுவதையட்டி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நத்தம், கோவில்பட்டி, செல்லப்பநாக்கன்பட்டி, பொய்யாம்பட்டி, மூங்கில்பட்டி, ஊராளிபட்டி, சேத்தூர், அரவங்குறிச்சி, சமுத்திராபட்டி, கோட்டையூர், சிறுகுடி, பன்னியாமலை, உலுப்பகுடி, காட்டுவேலம்பட்டி, ஆவிச்சிபட்டி, தேத்தாம்பட்டி மற்றும் ஒடுகம்பட்டி ஆகிய ஊர்களில் மின்சாரம் இருக்காது என நத்தம் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் தாழையூத்து துணை மின் நிலையத்தில் இன்று 4- ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால் தாழையூத்து, சேதுராயன்புதூர், நாஞ்சான்குளம், தென்கலம், மதவக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என கிராமப்புற செயற்பொறியாளர் குத்தாலிங்கம் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் நெல்முடிகரையில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (திங்கட்கிழமை) நடைபெறுவதால் திருப்புவனம், செல்லப்பனேந்தல், லாடனேந்தல், தூதை, டி.பாப்பாங்குளம், திருப்பாச்சேத்தி, மாரநாடு, கொத்தங்குளம், முதுவந்திடல், மேலச்சொரிக்குளம், கீழச்சொரிக்குளம், பிரமனூர், பழையனூர், வயல்சேரி, சொக்கநாதிருப்பு, கீழராங்கியம், மேலராங்கியம், அல்லிநகரம், வெள்ளக்கரை, நயினார்பேட்டை, கலியாந்தூர், கீழவெள்ளுர், மேலவெள்ளூர், மாங்குடி, அம்பலத்தாடி, முக்குடி, செங்குளம், காஞ்சிரங்குளம், பொட்டப்பாளையம், புலியூர், சாய்னாபுரம், பாட்டம், கொந்தகை, கீழடி, சொட்டதட்டி, மணலூர், தட்டான்குளம், வடகரை, மடப்புரம், பூவந்தி ஆகிய பகுதிகளில் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய மானாமதுரை செயற்பொறியாளர் ஜான்சன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

அரக்கோணம் மின் கோட்டத்திற்கு உட்பட்ட பாதைகளில் இன்று (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனையொட்டி இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மோசூர், அரக்கோணம் ஆர்.ஏ.பி.டி.ஆர்.பி மற்றும் வின்டர்பேட்டை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சுற்றியுள்ள எச்.டி.சர்வீசஸ், அரக்கோணம் நகரம், காவனூர், ஆனைபாக்கம், அம்பிரிஷிபுரம், கீழ் குப்பம், நாகவேடு, புளியமங்கலம், ஆத்தூர், செய்யூர், நகரிகுப்பம், அம்மனூர், நேவல், மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் மின் தடை ஏற்படும்.இதனை செயற்பொறியாளர் சரவணன் தெரிவித்துள்ளார்