சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு நேரத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில் பல மாவட்டங்களிலும் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த ஒரு மணி நேரத்திற்கு சென்னை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.