
தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று டாஸ்மாக் கடைகள் இயங்காது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் அறிவிப்பை மீறி இன்று டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடை பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.