கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் பிரசித்தி பெற்ற சந்திர சூடேஸ்வர் மலைக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவிழாவில் உள்ளூர் மட்டுமின்றி ஏராளமான வெளியூர் பக்தர்களும் கலந்து கொள்வார்கள். இதன் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு இன்று ஒரு நாள் மட்டும் உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதனால் இன்று பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் போன்றவைகள் செயல்படாது. அதே நேரத்தில் இன்று பொது தேர்வுகள் இருந்தால் அவைகள் வழக்கம்போல் நடைபெறும். மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்வதற்காக வேறொரு நாளில் வேலை நாளாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.