கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில்  இன்று மார்ச் 7-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சந்திர சூடேஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் இந்த வருடம் இந்த திருவிழாவை முன்னிட்டு ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி ஆகிய வட்டங்களுக்கு மார்ச் 7-ம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக மார்ச் 18-ஆம் தேதியை வேலை நாளாக மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் அறிவித்துள்ளார்.