மோசமான நிலையில் இருக்கக்கூடிய பேருந்துகளை இயக்க வேண்டாம் என்று மாநகரப் போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரித்துள்ளார். சென்னையில் வள்ளலார் நகரிலிருந்து திருவேற்காடு நோக்கி சென்ற பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் என் எஸ் கே நகர் நிறுத்தத்தில் இறங்குவதற்காக எழுந்த போது திடீரென பேருந்தின் தளத்தில் உள்ள பலகை உடைந்து ஓட்டை வழியாக கீழே விழுந்தார்.

இதில் அவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் இதை தொடர்பான செய்தி சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி பரபரப்பு கிளப்பியது. இந்த நிலையில் அனைத்து மாநகர பேருந்துகளையும் முழுமையாக பரிசோதித்த பிறகு இயக்க வேண்டும் என்றும் குறிப்பாக மேற்கூரை மற்றும் அடித்தளம் உள்ளிட்ட பாகங்களை முழுமையாக சோதனை செய்ய வேண்டும் எனவும் மிக மோசமாக உள்ள பேருந்துகளை இயக்க வேண்டாம் என்று அமைச்சர் சிவசங்கர் எச்சரித்துள்ளார்.