உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி மோசடியாக பதிவு செய்யப்பட்ட பிஎஸ்4 ரக வாகனங்களை பறிமுதல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இந்த வாகனங்களை பறிமுதல் செய்து சம்மந்தபட்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஒப்படைக்கும்படி அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க டிஜிபிக்கு நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. மோசடியாக பதிவு செய்யப்பட்ட வாகனங்களை அடையாளம் கண்டு அவற்றின் பதிவை ரத்து செய்யும் நடைமுறையை தற்போது தமிழ்நாடு போக்குவரத்து துறை மேற்கொண்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.