தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று தனியார் பள்ளிகளை திறக்க கூடாது என்று தனியார் பள்ளி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் சீரமைப்பு மற்றும் தூய்மை பணிகள் நடைபெற்று வருவதால் தனியார் பள்ளிகள் தங்கள் விருப்பம் போல இன்று பள்ளிகளை திறக்க வேண்டாம் எனவும் டிசம்பர் 11ம் தேதி முதல் வழக்கம் போல பள்ளிகளை திறக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.