தமிழகத்தில் தென்காசி,நெல்லை  மற்றும் குமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்க சுழற்சி வலுவிழந்து தமிழக கடற்கரையிலிருந்து தள்ளி சென்று விட்டதால் தென் தமிழக மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் நாளை குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.