கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நவம்பர் 1ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். திரு.வி.தாகூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்த கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைக்கப்பட்ட நாள் என்பதால் இதனை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் நவம்பர் 1ஆம் தேதி கன்னியாகுமரி தினம் கொண்டாடப்படுகிறது.

குமரி மாவட்டம் தோன்ற முதல் காரணமாக இருந்த தியாகி மார்ஷல் நேசமணியை அந்த பகுதி மக்கள் குமரி தந்தை என்று அழைக்கிறார்கள். இந்த நாளை நினைவுபடுத்தும் விதமாக நவம்பர் 1ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.