திருச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த வாரம்  ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கிய நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் ஏப்ரல் 16ஆம் தேதி இன்று நடைபெற உள்ளது. இதில் மாவட்ட மக்கள் பங்கேற்கும் வகையில் இன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாகவும் அதனை ஈடு செய்ய ஜூன் 8ம் தேதி வேலை நாளாக இருக்கும் என்றும் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார்.