
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை முதல் மழை பெய்து வரும் நிலையில் தற்போது இரவு 10:00 மணி வரையில் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இன்று இரவு 10:00 மணி வரையில் 6 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னனுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் ராமநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.