தமிழகத்தில் சட்ட ஒழுங்கு நிலைநாட்டும் விதமாக தீபாவளி மற்றும் பொங்கல் உள்ளிட்ட முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் என பல முக்கிய நாட்களில் மது கடைகள் மூடப்படுவது வழக்கம். அதன்படி வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி நாட்டில் 76 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் இதனை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் மதுக்கடைகள் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உரிமம் பெற்ற சில்லறை டாஸ்மாக் கடைகள் மற்றும் மது கூடங்கள் அனைத்தும் ஆகஸ்ட் 15ஆம் தேதி மூடப்படும் எனவும் இந்த உத்தரவை மீறி யாரும் அது விற்பனை செய்யக்கூடாது எனவும் மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழகத்திலும் பல மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது குறித்து அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.