தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவதற்கான அறிவிப்பை சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, இலவச வேஷ்டி சேலை, ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் வினியோகம் நேற்று முதல் தமிழகத்தில் தொடங்கியுள்ளது. இந்த வருடம் அனைத்து பொருட்களும் தரமாக இருக்க வேண்டும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பொங்கல் பரிசு தொகை முதல்வர் ஸ்டாலின் வருகின்ற ஜனவரி ஒன்பதாம் தேதி தொடங்கி வைக்கிறார்.

இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பை 12ஆம் தேதிக்குள் பெற முடியாதவர்கள்விடுபட்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜனவரி 13ஆம் தேதி வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். மேலும் இன்னும் இரண்டு நாட்களில் 100% பொருட்கள் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சென்றடைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.