தமிழகத்தில் விலைவாசி உயர்வுக்கு எதிராக இன்று ஜூலை 20ம் தேதி காலை 10 மணிக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பும் அதிமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் சமீப நாட்களாகவே தக்காளி, சின்ன வெங்காயம், பருப்பு மற்றும் மளிகை பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் நடுத்தர மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் தமிழக அரசு விலைவாசியை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது விலைவாசி உயர்வுக்கு எதிராக அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட அழைப்பு விடுத்துள்ளனர்.