தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இன்று ஜூலை 20 முதல் இதற்கான விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவை வழங்கப்பட உள்ளது. முதல் கட்டமாக விண்ணப்ப பதிவு முகாம் வருகின்ற ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரையும் இரண்டாம் கட்ட முகாம் ஆகஸ்ட் 5 முதல் ஆகஸ்ட் 18ஆம் தேதி வரையும் நடைபெறும்.

உரிமை தொகை பெறுவதற்கான விண்ணப்பம் மற்றும் டோக்கன் நாளை முதல் வீடு தேடி வழங்கப்படும் எனவும் அதனால் தங்களுக்கு கிடைக்காதோ என யாரும் பதற்றப்பட வேண்டாம் எனவும் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதியில் முகாமுக்கு சென்றால் போதும். அனைத்து ரேஷன் கடைகளிலும் முகாம் குறித்து அறிவிப்பு ஒட்டப்படும் எனவும் வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு வங்கி கணக்கு தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.