தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் ஆயிரம் ரூபாய் பெறுவதற்கான விண்ணப்ப பதிவு இன்று தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி திட்டம் விரிவு படுத்தப்படும் என அறிவித்துள்ளார்.

காலை உணவு திட்டம் மூலம் இரண்டு லட்ச மாணவர்கள் பயன் பெறுகின்றனர். இந்த திட்டம் 18 லட்சம் மாணவர்கள் பயன் பெறும் வகையில் விரிவுபடுத்தப்படும். கல்லூரி மாணவிகளுக்கான ஆயிரம் ரூபாய் திட்டத்தை அரசு சிறப்பாக செயல்படுத்தி வருவதாகவும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.