சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டி உள்ள தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காய்ச்சலுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய கூடும். அதன் பிறகுமேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து பிப்ரவரி 1-ஆம் தேதி இலங்கை கடற் பகுதிகளை சென்றடையும்.

இதனால் இன்று மற்றும் வருகின்ற 29, 30 ஆகிய தேதிகளிலும் தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன் பிறகு பிப்ரவரி 1-ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மற்றும் விதமான கன மழை பெய்யும். சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் அதிகபட்சம் வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 செல்சியஸ் ஆகவும் இருக்கும்.

மேலும் ஜனவரி 29, 30, 31, 1 ஆகிய தேதிகளில் இலங்கையை ஒட்டிய தெற்கு வங்க கடலில் மத்திய பகுதிகளில் 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் சில சமயங்களில் 55 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் மேற்குறிப்பிட்ட தேதிகளில் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.