தமிழகத்தில் இந்த வருடம் வழக்கத்தை விட முன்னதாகவே கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதேசமயம் இந்த வருடம் அக்னி நட்சத்திரம் தொடங்கியதும் கோடை மழை அவ்வப்போது பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, விருதுநகர், திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.