காவிரியில் அடுத்த 15 நாட்களுக்கு நால்வரும் ஐந்தாயிரம் கன அடி தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் இன்று நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில் கர்நாடக அரசு திடீரென்று தண்ணீர் வழங்குவதை நிறுத்தி விட்டது.

இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் அதன் தலைவர் ஹல்தர் தலைமையில் இன்று நடைபெற்ற நிலையில் இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு தினமும் ஐந்தாயிரம் கன அடி நீர் திறக்க கர்நாடகா அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.