சென்னையில் மக்களின் வசதிக்காக மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை தொடர்ந்து முக்கிய நகரங்களான கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ அமைப்பது தொடர்பாக அறிக்கை பெறப்பட்டு விரிவான திட்ட அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது திருச்சி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் மெட்ரோ பணிகளை தொடங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருச்சி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் மெட்ரோ பணிகளுக்கான சாத்தியக்கூறுகள் அறிக்கை இன்னும் சில நாட்களில் அரசிடம் சமர்ப்பிக்கப்படும். முதல் கட்டமாக திருச்சியில் மூன்று வழித்தடங்களிலும் சேலத்தில் இரண்டு வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.