தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தமிழ் சினிமாவில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நிலையில் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து தற்போதைய லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். நடிகை நயன்தாரா பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு ஜோடியாக தற்போது ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகை நயன்தாரா கடந்த வருடம் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இரட்டை ஆண் குழந்தைகள் இருக்கிறது.

 

நடிகை நயன்தாரா தன் 75-வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில்  தன கைவசம் உள்ள படங்களில் மட்டும் நடித்துவிட்டு பின் சினிமாவை விட்டு விலகி விடலாம் என நயன்தாரா  முடிவெடுத்துள்ளதாக ஒரு புதிய தகவல் வெளிவந்துள்ளது. நயன்தாரா தன்னுடைய குழந்தைகளை கவனித்து கொள்வதற்காக சினிமாவிலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் நிலையில் நடிப்பிலிருந்து விலகி தயாரிப்பில் மட்டும் கவனம் செலுத்துவதற்கு நயன்தாரா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.