பாலிவுட் நடிகை பரினீதி சோப்ரா 2011 ஆம் ஆண்டில் வெளியான பெண்கள் எதிர் ரிக்கிபாய் திரைப்படத்தில் நடித்தார். இந்தத் திரைப்படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதுகள் பெற்றார். மேலும் அந்தத் திரைப்படத்திற்காக சிறந்த பெண் துணைக் கதாப்பாந்திரத் தேர்விற்காக பரிந்துரை செய்யப்பட்டார். இஷக்ஸாதே  ஷுட் டேசி ரொமான்ஸ் மற்றும் ஹேசே தோ பசே  போன்ற வெற்றிப் படங்களிலும் நடித்தார்.

இந்நிலையில் பாலிவுட்டில் தொடர் திருமணங்களை பார்த்துவிட்டு தானும் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக பாலிவுட் நடிகை பரினீதி சோப்ரா தெரிவித்துள்ளார். “இன்னும் நான் தனியா தான் இருக்கேன். முன்பு காதல் திருமணம் செய்து கொள்ள விரும்பினேன். ஆனால், இப்போது திருமணம் செய்துக்கொள்ள தயார். யாராவது என்னை திருமணம் செய்ய இருக்கிறீர்களா?” என்று தெரிவித்துள்ளார்.