தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருக்கும் செல்வராகவன் தற்போது நடிகராகவும் அவதாரம் எடுத்திருக்கின்றார். அந்த வகையில் சமீபத்தில் அவர் நடிப்பில் பகாசூரன் என்ற படம் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் மனைவியுடன் அவர் இணைந்து கலந்து கொண்ட நிகழ்வில் உங்க மனைவி கிட்ட சொல்லனும்னு ஆசைப்படுகிற விஷயம் என்ன என கேட்டதற்கு உடனே அவர் I Love you என கூறினார்.

இதனைத் தொடர்ந்து செல்வராகவன் பற்றி ஏதாவது கூறுமாறு அவர் மனைவி கீதாஞ்சலிடம் கேட்க, நான் பகாசூரன் படத்தை பார்த்து விட்டு அவரது நடிப்பை பாராட்டி இருக்கிறேன் என கூறினார். மேலும் நான் போட்டுக் கொடுக்கிற காப்பியை பார்த்து ரொம்பவுமே பீல் பண்ணுவார். ஆனாலும் திட்டிக்கொண்டே அதனை குடித்து விடுவார் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.