திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் ஒரு முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சம்பவநாளில் சாமி தரிசனம் செய்ய வந்த காதலர்கள் கோவிலுக்கு அருகே தனியாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மூன்று பேர் கொண்ட கும்பல் அங்கு வந்து கத்தியை காட்டி அவர்களை மிரட்டியுள்ளனர்.

அதன் பிறகு அவர்களிடம் இருந்த பணம், செல்போன் மற்றும் நகைகள் போன்றவற்றை பறித்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் போது வழிப்பறியில் ஈடுபட்டது அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன், குட்டி மற்றும் கலையரசன் என்பது தெரியவந்தது. மேலும் இவர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.