சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முன்தினம் ஐபிஎல் 39 வது லீக் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் சென்னை மற்றும் லக்னோ அணிகள் மோதிய நிலையில் லக்னோ அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியின் போது கள்ள சந்தையில் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக திருவல்லிக்கேணி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையின் போது டிக்கெட் விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு இந்த வழக்கில் தொடர்புடைய 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 52 டிக்கெட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.