தனிநபர் குடும்ப அட்டைக்கும் வெள்ள பாதிப்பு நிவாரண தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

குடும்ப அட்டையில் ஒருவர் பெயர் இருந்தாலும் ரூபாய் 6000 நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. குடும்ப அட்டையில் ஒருவர் பெயர் மட்டுமே இருந்தால் கூட தனிநபர் அட்டைக்கும் நிவாரணம் உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரேஷன் அட்டை விண்ணப்பம் செய்து, இதுவரை அட்டை இல்லாதவர்களுக்கும், இந்த தொகை வழங்கப்படும். அதாவது ரேஷன் கார்டுக்கு விண்ணப்பம் செய்து, இதுவரை கிடைக்காத பட்சத்தில் அட்டை வரும் என்பதால் அவர்களுக்கும் இந்த 6000 ரூபாய் பொருந்தும்.