அரியலூர் மாவட்ட ஆட்சியராக கூட்டரங்கில் வருகின்ற டிசம்பர் 15ஆம் தேதி காலை 10:30 மணி அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற இருக்கிறது. ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ள இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகள் தங்களின் கோரிக்கைகளை மனுவாக கொடுத்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.