எந்த காலத்திலும் தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓபிஎஸ், சட்ட விதிகளை மதிக்காமல் காலடியில் போட்டு மிதிக்கும் சூழல் உருவாகியுள்ளதால் தான் அதிமுக தொண்டர்களின் உரிமை மீட்பு குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகின்றது. அடிப்படை உறுப்பினராக இருப்பவர் கூட பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடலாம் என்று எம்ஜிஆர் சட்டம் வகுத்தார்.

தற்போது சாதாரண தொண்டர்கள் போட்டியிட முடியாது. 10 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு தேவை என்று சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளனர். இதனால் வசதி படைத்தவர்கள் தான் பதவிக்கு வர முடியும். எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யும் வரை இந்த போராட்டம் தொடரும் என்று ஓபிஎஸ் கூறியுள்ளார்.