உத்தர பிரதேச மாநில மீருட் பகுதியை சேர்ந்தவர்கள் நரேஷ் – மோனா தம்பதி. இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் இருந்தனர். சம்பவத்தன்று நரேஷ் மோனா மற்றும் அவர்களது இரண்டு மகள்கள் என நான்கு பேரும் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயற்சித்தனர். அப்போது நரேஷ் தண்டவாளத்தை கடந்துவிட்ட நிலையில் வேகமாக வந்த வந்தே பாரத் ரயில் மோனா மற்றும் இரண்டு மகள்கள் மீது மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே மூன்று பேரும் உயிரிழந்த நிலையில், அவர்களது உடலை மீட்ட ரயில்வே காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.