தமிழில் தளபதிக்கு ஜோடியாக பத்ரி திரைப்படத்தில் நடித்து அறிமுகமானவர்தான் பூமிகா. மேலும்  ரோஜா கூட்டம், சில்லுனு ஒரு காதல், களவாடிய பொழுதுகள், கொலையுதிர் காலம் போன்ற படங்களிலும் நடித்து உள்ளார். அண்மையில் திரைக்கு வந்த உதயநிதியின் கண்ணை நம்பாதே படத்தில் இரு வேடங்களில் பூமிகா நடித்திருந்தார்.

இவர் திரையுலகிற்கு வந்து 23 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் சினிமா வாழ்க்கை பற்றி பூமிகா அளித்துள்ள பேட்டியில், “சூட்டிங்கின்போது நான் யாரிடமும் அதிகம் பேசுவது இல்லை. நகைச்சுவை கதாபாத்திரத்துக்காக பல வருடங்கள் முயற்சி செய்தேன். எனினும் இதுவரை கிடைக்கவில்லை. அதிரடி திரைப்படங்களில் கூட தன்னால் நடிக்க முடியும். திகில் திரைப்படங்களில் நடிக்கவும் விருப்பம் உள்ளது. எனினும் சினிமா இயக்குனர்கள் எனக்கு மென்மையான கேரக்டர்களை மட்டுமே கொடுக்க விரும்புகின்றனர். இது எனக்கு வருத்தமளிக்கிறது” என்று அவர் கூறினார்.