டெல்லி அரசு தற்போது முக்கியமான முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதாவது பல்வேறு அரசு துறைகளில் செலவுகளை குறைக்க உபேர் நிறுவனத்தின் சேவைகளை பயன்படுத்த முடிவு. தற்போது இந்த சேவைகள் ஒரு முன்னோடி திட்டமாக தொடங்கப்பட்டு விரைவில் பல்வேறு அமைச்சகங்கள், ஏஜென்சிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு கிடைக்கும்.

உபேர் இந்த சேவைகளை நிலையான கட்டணத்தில் வழங்கும் என்று கூறப்படுகிறது. இதனால் செலவு குறையும் என அரசு நம்புகிறது. மேலும் டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து வரும் சூழலில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன பயன்பாடுகளில் பெரும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றது.