இந்திய ரிசர்வ் வங்கி டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு  பயனர்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் மற்றும் பிரீபெய்டு கார்டுகள் வழங்குவது தொடர்பாக புதிய விதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்த புதிய விதிகளின்படி வங்கிகள் மற்றும் பிற கார்டு வழங்கும் நிறுவனங்கள் தங்களின் டெபிட், கிரெடிட் மற்றும் பிரீபெய்டு கார்டுகளை ஒன்றுக்கு மேற்பட்ட கார்டு நெட்வொர்க்கில் வழங்க வேண்டும். இது பல அட்டை நெட்வொர்க் விருப்பத்தை வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். அதன் மூலமாக வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான கார்டு நெட்வொர்க்கை தேர்வு செய்து மாறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.