டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸின் ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் ஜூன் 29ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் நிலையில் 55 நாட்களுக்கு போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் சேர்ந்து நடத்தும் நிலையில் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் போட்டியில் நாங்கள் தாக்குதல் நடத்துவோம் என பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

டி20 உலகக்கோப்பை போட்டியில் தாக்குதல் நடத்துவோம் என பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் மிரட்டல் விடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் எத்தகைய சவாலையும் பிரச்சனையையும் சந்திக்கும் விதமாக உச்சகட்ட பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் உறுதி அளித்துள்ளது