எஸ்.பி.ஐ வங்கிக்கு நாடு முழுவதும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்த வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு எஸ்பிஐ வங்கி பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது. இதனால வாடிக்கையாளர்களும் பயனடைந்து வருகின்றனர்.  அந்தவகையில் எஸ்பிஐ வங்கி வீட்டுக் கடன்கள் மீதான தள்ளுபடி ஆஃபர்களை அறிவித்துள்ளது.

விழாக்கால தள்ளுபடி என்று குறிப்பிட்டு வீட்டுக் கடன்கள் மீதான வட்டியில் 0.65% வரை குறைக்கப்படும் என்று வங்கி தெரிவித்துள்ளது. இந்த தள்ளுபடி டிசம்பர் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் NRI உள்ளிட்ட அனைவரும் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.