எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் கருவியாக ED உள்ளது என ஜார்க்கண்ட் முதலமைச்சர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஹேமந்த் சோரன் ED சம்மனை எதிர்த்து ஜார்க்கண்ட் முதலமைச்சர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதன்படி, மத்திய பாஜக அரசை எதிர்க்கும் எதிர்க்கட்சியினரை குறிவைத்து பழிவாங்கும் ஒரு கருவியாக அமலாக்கத்துறை மாற்றப்பட்டுள்ளது.

பொதுத்தேர்தல் நெருங்குவதாலும், NDA கூட்டணிக்கு எதிராக வலுவான INDIA கூட்டணி கட்டமைக்கப்பட்டுள்ளதாலும், அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் வேகம் எடுத்துள்ளன என ஜார்க்கண்ட் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.