தமிழகத்தில் குரூப் 1 மற்றும் குரூப் 2 உள்ளிட்ட 15 தேர்வுகளின் முடிவுகள் பிப்ரவரி மாதத்திற்குள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் தெரிவித்துள்ளார். குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வில் 5,777 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த தேர்வு முடிவுகள் ஜனவரி 12ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே குரூப் 1-ல் 95 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.