ஆந்திரா பார்வதி மன்யம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் நோயாளிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் மின்சாரம் இல்லாததால் அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் மின்வெட்டு குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று நோயாளிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.