நடிகர், நடிகைகளை பற்றி ஏதாவது சர்ச்சையாக பேசும் நடிகர் பயில்வான் ரங்கநாதன், யூடியூப் சேனல் ஒன்றில் ‘நடிகை ஜோதிகா வாக்களிக்க வராதது குறித்து  பேசியுள்ளார். அப்போது  சிவகுமாரின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? மகன் மட்டும் வந்து வாக்களிக்கிறார். ஆனால் மருமகள் வரவில்லை. இந்த விஷயத்தில் ஜோதிகாவின் நடத்தை சரியில்லை.

மாமியார், மாமனாருக்கு அவர் அடங்கி இருக்க வேண்டும். கணவனும், மனைவியும் ஒன்றாக இருக்க வேண்டும். அதை எல்லாம் ஜோதிகா மறந்துவிட்டார்’ என கூறியுள்ளார். பயில்வானின் இந்த பேச்சும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், நெட்டிசன்கள் மற்றும் சூர்யா ரசிகர்கள் வெளுத்து வாங்கி வருகிறார்கள்.