தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் நெல்சன் திலீப்குமார். இவர் இயக்கத்தில் கடந்த வருடம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நெல்சன் திலீப் குமாரிடம் லியோ படத்தை நீங்கள் இயக்கி இருந்தால் யாரை நடிக்க வைத்திருப்பீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் நான் லியோ படத்தை இயக்கியிருந்தால் விஜயுடன் பிரபல நடிகர்கள் மம்மூட்டி, மகேஷ் பாபு, ஷாருக்கான் ஆகியோரை நடிக்க வைத்திருப்பேன். அதன் பிறகு கதாநாயகிகளாக நயன்தாரா மற்றும் ஆலியா பட் ஆகியோரை தேர்ந்தெடுத்திருப்பேன் என்று கூறியுள்ளார். மேலும் கடந்த வருடம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்த நிலையில் இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.