தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் பாலிவட்டில் ஜவான் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இந்த படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. நடிகை நயன்தாரா தொடர்ந்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் GQ இந்தியா இதழ் நடத்திய விருது வழங்கும் விழாவில் நடிகை நயன்தாரா கலந்து கொண்டார். இவர் மிகவும் செல்வாக்கு மிக்க இந்தியர்கள் 2024 விருதை வென்று அசத்தியுள்ளார்.

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக மும்பை சென்ற நயன்தாரா முன் எப்போதும் இல்லாத வகையில் கவர்ச்சியில் கலக்கியுள்ளார். அவர் ஹாலிவுட் நடிகை போன்று கருப்பு நிறத்தில் லோ நெக் உடையை அணிந்திருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த புகைப்படத்தை நயன்தாரா தன்னுடைய சமூக வலைதள  பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் லைக்குகள் குவிந்து வருகிறது. மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நயன்தாரா சமூகத்தில் உள்ள பெண்கள் மீது பல கட்டுப்பாடுகள் உள்ளது என்று கூறினார். அதோடு குரல் கொடுக்க முடியாமல்  ஒதுக்கப்பட்டவர்களுக்காக தான் இதை செய்கிறேன் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.