ஜெய்பீம்’ படத்தின் உண்மை சம்பவத்தில் போலீசாரின் அத்துமீறலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி இழப்பீடு வழங்குவது குறித்த நிலைபாட்டை தெரிவிக்கும்படி, தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடலூர் கம்மாபுரத்தில் 1993ல் போலீஸ் துன்புறுத்தலில் உயிரிழந்த ராஜகண்ணுவுக்காக மனைவி பார்வதி நடத்திய சட்ட போராட்டத்தை தழுவி ‘ஜெய்பீம்’ திரைப்படம் எடுக்கப்பட்டது.

ஏற்கனவே நீதிமன்ற உத்தரவுப்படி இடைக்கால இழப்பீடு வழங்கப்பட்ட நிலையில், பொது சட்டப்படி இறுதி இழப்பீடு கோரி, ராஜகண்ணுவின் உறவினர் தொடர்ந்த வழக்கில் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.