ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு வரும் பிப்,.24 ஆம் தேதி சிறப்பு மலர் வெளியிடப்படும் என இபிஎஸ் அறிவித்துள்ளார். ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை மாவட்ட செயலாளர்கள் சிறப்பாக கொண்டாடவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.மேலும் மார்ச் 5,6,7, 10,11,12 ஆகிய நாட்களில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பிப்ரவரி 20ஆம் தேதி ஓபிஎஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே இபிஎஸ் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.