ஜெயலலிதாவை மோடிதான் கொன்றார் என்று திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் பேசியிருப்பதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தெருமுனை பிரசாரக்கூட்டம் விளாத்திகுளத்தில் நடைபெற்றது. இதில் பேசிய மார்க்கண்டேயன், ஜெயலலிதா பிரதமர் வேட்பாளராக நிற்கப்போகிறேன் என கூறியதால் பாஜகதான் அவரை கொன்றுவிட்டது என கூறியுள்ளார்.

இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, திமுக எம்எல்ஏக்கள் எப்போதுமே பல பொய்களை கூறி வருகின்றனர் என்பதை CM ஸ்டாலினுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன் என மார்க்கண்டேயன் பேசிய வீடியோவை தனது ட்விட்டரில் அண்ணாமலை பதிவிட்டுள்ளார். மேலும், பாஜக எப்போதும் அமைதியாக இருக்காது என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.