முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு கணிசமான அளவு பெண்களின் வாக்கு வங்கி இருந்தது. தேர்தல் குறித்து ஆய்வு நடத்தும் அமைப்புகளும் தரவுகள் மூலம் இதை உறுதி செய்தன. ஜெயலலிதா காலத்தில் 46% பெண்கள் அதிமுகவிற்கும், 35% பெண்கள் திமுகவிற்கும் வாக்களித்துள்ளனர். இந்நிலையில் உரிமைத் தொகை திட்டம் மூலம் பெண்களின் வாக்கு கணிசமாக திமுகவிற்கு விழ வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.