தமிழகம் முழுவதும் வீட்டு இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்ய, மின் வாரிய இணையத்தில் விண்ணப்பித்து, ஆவணங்களை பதிவேற்றம் செய்ய  கட்டணம் செலுத்தும் வசதி இருக்கிறது. இந்நிலையில் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை போக்க கட்டணம் செலுத்திய அன்றே பெட்டர் மாற்றம் செய்து வழங்க ஜூலை 24 முதல் ஒரு மாத காலத்திற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் சிறப்பு முகாம் நடத்தவுள்ளது.

இதில் பெயர் மாற்றம் உள்ளிட்ட அடிப்படை மாற்றங்களை செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மின்சார அலுவலகங்களிலும் சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலமாகவும் பெயர் மாற்றம் செய்து கொள்ளும் வசதி நடைமுறையில் உள்ளது. சிறப்பு முகாம்கள் காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறவுள்ளன.