மக்களவை தேர்தல் பரப்புரைக்காக 8வது முறையாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி நெல்லை பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் கூட்டத்தில் பேசுகையில், “நீங்கள் வருவது தெரிந்தவுடன் உதயசூரியன் கூட அஸ்தமித்துவிட்டது. வானமே உங்களை வாழ்த்திக் கொண்டிருக்கிறது.

ஜூன் 4ஆம் தேதிக்கு மேல் 400-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மோடியின் காலடியில். உதயசூரியன் இன்று மறைந்தது போல 4ஆம் தேதிக்கு மேல் மறையும்” என்றார்.